Tricks and Tips

bloggers hai

Ashokha - Find me on Bloggers.com

bring me the light

When you are doing meditation at certain stage one blankness will come. You are having a feeling of “virrrrrrrrrrrr” in your body. If you afraid that something wrong has happened to you, you will immediately come down to the normal stage. Avoid this fear. Enjoy that vibration. Just observe that vibration so that it will continue for some more time. Establish it. Similarly during deep sleep in the early morning if you awakened all on a sudden this “virrrrrrrr” feeling will come. Without fear enjoy it. When there is no electricity this experience comes quickly. The magnetic field created by fan or the static current field created by the air conditioner will disturb the cosmic energy flow. We can artificially create this atmosphere by switch off the main before going to bed. Correct effect will be getting if the current is stopped suddenly by any timer switch. This may be due to the sudden alertness made in the body and the hormone secretion will be high. It is the Alpha waves stage. Fourth stage of consciousness. Your pineal gland is activated. In this stage if you ask anything it will be given. "So I say to you, ask, and it will be given to you; seek, and you will find; knock and it will be opened to you……. Bible. Anything asked in deep stage will be given. ……ashokha

visitors

Followers

Sunday, April 14, 2013

நடிகைகளை அழகு என்று சொன்னதற்கே பதவி போச்சா.ஒருவேளை கிழவிகளை பாராட்டியதால் கவர்ன்மெண்டுக்கு கோபம் வந்துவிட்டதோ?


நடிகைகள் பற்றி வர்ணனை அமைச்சர் டிஸ்மிஸ்

கருத்துகள்



நடிகைகளை அழகு என்று சொன்னதற்கே பதவி போச்சா. ஒருவேளை கிழவிகளை பாராட்டியதால் கவர்ன்மெண்டுக்கு கோபம் வந்துவிட்டதோ? http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=46756 நடிகைகள் பற்றி வர்ணனை அமைச்சர் டிஸ்மிஸ் லக்னோ, ஏப். 15: உத்தரபிரதேச மாநில அரசில் கதர்த்துறை அமைச்சராக ராஜாராம் பாண்டே இருந்தார். அவர் பொது இடங்களில் பெண்களின் அழகை வர்ணிப்பதையே ஒரு பழக்கமாக வைத்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிரதாப்கர் என்ற இடத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும் போது, �நடிகைகள் ஹேமமாலினி, மாதுரி தீட்சித் ஆகியோரின் கன்னங்களை போல பளபளப்பாக சாலைகள் அமைக்கப்பட வேண்டும்� என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, ராஜாராம் பாண்டேவை அமைச்சரவையில் இருந்து முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கினார். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சரவையில் இருந்து பாண்டேயை ஆளுநர் பி.எல்.ஜோஷி நீக்கியதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாராம் பாண்டே ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் சுல்தான்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசும் போது அந்த மாவட்டத்து பெண் கலெக்டரை மிக அழகானவர் என்று வர்ணித்தவர் ஆவார். ராஜாராம் பாண்டே நடிகைகள் பற்றி வர்ணனை அமைச்சர் டிஸ்மிஸ் கருத்துகள் 01:21:35Monday2013-04-15 .

காணாமல் போகும் விடைத்தாள்கள்,answer sheets missing, destroyed in railway lines,

வினாத்தாள்கள் பத்திரமாக லாரிகள் (பெரும்பாலும் டீவீஸ் போன்ற நம்பகமான கம்பெனிகள்) மூலம் கட்டுகாப்பாளர்கள் அறைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் பதில் தாள்களும் லாரிகள் மூலம் திருத்தும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம்.. இருபது வருடங்களுக்கு முன்னால் காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா இடையே பதில் தாள்களை ரயில்வே லைனில் போட்டு அதில் நிறைய மூட்டைகள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன. ரயில் ஒரு நிமிடம்தான் நிற்கும். அதற்குள் 400 மூட்டைகளை இறக்குவது முடியாத காரியம். அதனால் நாங்கள் ரயில்வே லைன் ஓரமாக போட்டுக் கொண்டே போனோம் என்று ஆர் எம் எஸ் சொல்லியது. மீண்டும் அதே போல் இந்த வருடம் ஒரு மூட்டை லைனில் விழுந்தது. ஒன்று டாஸ்மாக்கில் காணாமல் போய்விட்டது. எனவே இனி ஆர் எம் எஸ்ஸை நம்பாமல் லாரிகளை கல்வித்துரை பயன்படுத்தலாம். காணாமல் போகும் விடைத்தாள்கள் கருத்துகள் 01:17:54Monday2013-04-15 http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=46749 Save Money On Travel MORE VIDEOS தேர்வு என்றாலே மாணவர்களுக்கு கடுப்பாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது கஷ்டப்பட்டு தேர்வு எழுதிய விடைத் தாள்கள் காணமால் போய் விட்டது என்றால் எப்படி இருக்கும். அதிலும் அந்த தேர்வை திரும்ப எழுத வேண்டியிருக்கும் என்று சொன்னால்... நல்லவேளையாக மறுதேர்வு நடக்கவில்லை. தப்பித்தார்கள் மாணவர்கள். கடலூர் மாவட்டம். கடந்த 28ம் தேதி. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு புவனகிரி அருகே உள்ள பி.முட்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 534 மாணவர்கள் தமிழ் இரண்டாம்தாள் தேர் வெழுதினர். விடைத்தாள்கள் 3 பண்டல்களாக கட்டப்பட்டு, அதே பகுதியில் உள்ள தபால் அலுவலகம் மூலமாக பார்சல் செய்யப்பட்டு, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்வே மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி மண்டல தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது விபரீதம் நடந்தது. ரயில்பெட்டியின் கதவுகளை சரியாக மூடாததால், ரயில்நிலையத்தில் இருந்து சிறிது தூரத்திலே மூன்று பண்டல்களில் ஒன்று தவறி விழுந்தது. திருச்சியில் மறுநாள் காலை ரயில்வே ஊழியர்கள் பண்டலை இறக்கி வைக்கும் போதுதான் ஒரு பண்டல் குறைவாக இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே விருத்தாசலம் ஊழியர்களுக்கு தகவல் சொன்னார்கள், ரயில்வே டிராக்கில் விடைத்தாள் கட்டுகளை தேடி அதிகாரிகள் தலைதெறிக்க ஓடினார்கள். ரயில்வே டிராக்கில் விடைத்தாள்கள் சின்னாபின்னமாக சிதறி கிடந்தன. அவை பி.முட்லூர் பள்ளியை சேர்ந்த 357 மாணவர்களின் விடைத்தாள் பண்டல்கள். அடுத்தடுத்து வந்த ரயில்களால் சுக்கு நூறாக கிழிந்த விடைத்தாள்கள் குப்பைகளுடன் சேர்த்து தீ வைத்து கொளுத்தப்பட்டது. சற்று பெரிய அளவில் கிழிந்து கிடந்த விடைத்தாள்களை மூட்டையில் கட்டி ஊழியர்கள் எடுத்து சென்றனர். மறு தேர்வு வைக்கப்படுமா என்ற நிலையில் பல்வேறு ஆலோசனைகள் குழப்பங்களுக்கு பின்னர் இறுதியாக தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் 2ம் தாளுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்ட 4 அஞ்சல்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த மூன்றாம் நாள். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. 221 பேர் தேர்வு எழுதினர். சத்தியமங்கலம் தபால் அலுவலகத்தில் இருந்து அஞ்சலக ஊழியர் சவுந்தர்ராஜன் தனியார் பேருந்து மூலம் செஞ்சி சென்றார். அங்கிருந்து ரயில்வே மெயில் சர்வீசில் விடைத்தாள்களை கொடுக்க திண்டிவனத்திற்கு சென்றுள்ளார். இடையில் எங்கேயோ விடைத்தாள் 2 பண்டல்கள் அடங்கிய பையை அவர் தொலைத்துவிட்டார். ஊழியர் சவுந்தர் ராஜனை பணியிடை நீக்கம் செய்துவிட்டோம் என தபால் துறையும் எல்லாவற்றுக்கும் அஞ்சல்துறைதான் முழு பொறுப்பு என தேர்வுத்துறையும் ஒதுங்கிக்கொண்டன. கடலூரை போன்றே மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என்றும், ஆங்கிலம் 2ம் தாளில் பெறப்படும் மதிப்பெண்தான் ஆங்கில முதல் தாளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசும் தெரிவித்து தப்பித்துக்கொண்டது. கல்வித்துறை, தபால் துறை, காவல்துறைக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அவதிப்பட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தோடு இப்படியா விளையாடுவது என ஆசிரியர்களும் பெற்றோரும் புலம்புகின்றனர். மாணவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விடைத்தாள்கள் தேர்வுத்துறை, தபால் துறையின் அலட்சியத்தால் கீழே விழுந்து நாசமாகியுள்ளது. விடைத்தாள்கள் தவறி விழுந்து சேதமடைந்தது, மாணவர்களை அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்ய முடியாத வகையில் மனரீதியாக பாதித்தது என்பதுதான் உண்மை. பொதுத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்தான், மேற்படிப்பிற்கு அச்சாரமாக இருப்பதால், அவற்றை கவனமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மதுவால் மறைந்த விடைத்தாள் விழுப்புரம் சத்தியமங்கலம் தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை கொண்டு சென்ற கிராமிய அஞ்சல் ஊழியர் சவுந்தர்ராஜன் விடைத்தாள்களை எங்கே தொலைத்தார் என்பதே அவருக்கு தெரியவில்லை. தனியார் பேருந்து மூலம் செஞ்சி வந்த சவுந்தர்ராஜன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி விட்டு மீண்டும் திண்டிவனத்துக்கு பேருந்தில் புறப்பட்டார். விடைத்தாள் பண்டல்கள் டாஸ்மாக்கில் தவறியதா? அல்லது பேருந்தில் தவறியதா? என்பதை கூட மதுவின் போதை மறைத்துவிட்டது. தொலைந்து போன விடைத்தாள்களை தேடி 4 தனிப்படைகள் அலைந்து திரிந்தது. ஆட்சியர் சம்பத், எஸ்பி மனோகரன் இரண்டு நாட்களாக முகாமிட்டும் தொலைந்ததை கடைசி வரை கண்டுபிடிக்கமுடியவில்லை. விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் தபால்துறையை மட்டுமே நம்பி இருக்காமல், தமிழக அரசு செயலில் இறங்க வேண்டும். கல்வி மாவட்டங்களில் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை தேர்வுத்துறையே அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் சேகரித்து வாகனங்களில் கொண்டு சென்று உரிய இடத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருவிளக்கு பூஜை,lamp festival,

சாந்தனாதர் சன்னதியில் சித்திரை ஒன்று அன்று திருவிளக்கு பூஜை நடந்தது.
சாந்தனாதர் சன்னதியில் சித்திரை ஒன்று அன்று திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவிளக்கு வழிபாட்டில் 19 பகுதிகள் உள்ளன. அவற்றை விவரமாக பார்ப்போம். 1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு 2. தேவையான பொருட்கள் 3. பூஜைக்குத் தயாராகுதல் 4. கணபதி வாழ்த்து 5. தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல் 6. தேவி வாழ்த்து 7. திருவிளக்கு அகவல் 8. திருவிளக்குப் பாடல் 9. கலசபூஜை 10. அர்ச்சனை செய்யும் முறை 11. அர்ச்சனை 108 12. போற்றுதல் முறை 13. போற்றுதல் 108 14. நிவேத்யம் 15. பாட்டு 16. தீபாராதனை 17. வலம்வருதல் 18. மங்களம் 19. பிராரத்தஆனை 1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது. ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர். 2. தேவையான பொருடகள் திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப்பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன. 3. பூஜைக்குத் தயாராகுதல் (i) திருவிளக்கை சுத்தம் செய்தல் திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும். (ii) பீடம் அமைத்தல் திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும். திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும். (iii) அலங்காரம் செய்தல் திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம், குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும். (iv) பூஜைக்கு அமருதல் திருவிளக்கில் எண்ணெய்விட்டு, குறைந்தபட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாது. கற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது. பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும். திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும். எல்லோரும் சொல்லுக : ஓம். ஸர்வே பவந்து ¥கின : ஸர்வே ஸந்து நிராமயா : ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கச்சித் துக்கபாக் பவேத் 4. கணபதி வாழ்த்து (i) ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே. (ii) கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ¢தம் உமாஸ¤தம் சோக விநாச காரணம் நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம் ஓம் ¤முகாய நம: ஓம் கபிலாய நம: ஓம் லம்போதராய நம: ஓம் விக்ன ராஜாய நம: ஓம் தூம கேதவே நம: ஓம் பாலசந்த்ராய நம: ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் ஹேரம்பாய நம: ஓம் ஏகதந்தாய நம: ஓம் கஜகர்ணிகாய நம: ஓம் விகடாய நம: ஓம் கணாதிபாய நம: ஓம் கணாத்யஷாய நம: ஓம் கஜானனாய நம: ஓம் ¥ர்ப்பகர்ணாய நம: ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி 5. தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல் கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும்போது ''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி'' என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும். ''ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக''. 6. தேவி வாழ்த்து ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகே கெளரி நாராயணி நமோஸ்துதே ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் சக்திபூதே சனாதனி குணாச்ரயே குணமயே நாராயணி நமோஸ்துதே சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே 7. திருவிளக்கு அகவல் விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாக்ஷ¢ தாயாரே பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரி போட்டு குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன் ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா சந்தானப்பிச்சை தனங்களும் தாருமம்மா பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன் மாதாவே உன்றன் மலரடியில் நான்பணிந்தேன். 8. திருவிளக்குப் பாடல் (ரகுபதி ராகவ அல்லது நீலக்க்கடலின் ஓரத்தில் மெட்டு) மங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்குதுவே பொங்கும் மனத்தால் நித்தமுமே போற்றி வணங்கும் விளக்கிதுவே இருளை நீக்கும் விளக்கிதுவே இன்பம் ஊட்டும் விளக்கிதுவே அருளைப் பெருக்கும் விளக்கிதுவே அன்பை வளர்க்கும் விளக்கிதுவே இல்லம் தன்னில் விளக்கினையே என்றும் ஏற்றித் தொழுதிடவே பல்வித நன்மை பெற்றிடலாம் பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம் விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விளங்கும் ஜோதிதனை விமலை என்றே உணர்ந்திடுவோம். 9. கலச பூஜை கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும். ''கங்கே யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு'' பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும். பின் கீழ்வருமாறு சொல்லுக : ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை - அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை - புவியடங்கக் காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் - கரும்பு வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே 10. அர்ச்சனை செய்யும் முறை ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.